பதிவு செய்த நாள்
23
மார்
2019
02:03
கோவில்பாளையம் : கோவில்பாளையத்தில், நூற்றாண்டுகள் பழமையான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, விநாயகர், துர்க்கை, முருகன், நவகிரகம் ஆகியவற்றுக்கு புதிதாக சன்னதி அமைத்து, மண்டபம் ஏற்படுத்தி, கர்ப்பக்கிரக கதவுகளுக்கு, தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதித்து, திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும் இன்று (மார்ச்., 23ல்) துவங்குகிறது. இன்று (மார்ச்., 23ல்), மாலையில் திருவிளக்கு வழிபாடு, முதற்காலை வேள்வி பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை (மார்ச்., 24ல்) காலை 7:30 மணிக்கு, விமானங்கள் மற்றும் மூல மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அச்சம்பாளையம் குழுவின் பஜனை நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.