பதிவு செய்த நாள்
23
மார்
2019
02:03
குன்னூர் : குன்னூர் ஸ்டேன்லி பார்க் பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில், 14வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை, சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பக்தர்கள் கோவிலில், கொடியேற்றினர். நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) காலை, 9:00 மணிக்கு காவடி ஊர்வலத்தில், பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்.
தொடர்ந்து அபிஷேகம், அன்னதானம் நடந்தன. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல, வி.பி., தெரு சுப்ரமணிய சுவாமி கோவில், அருவங்காடு காந்திநகர், வெலிங்டன் பாலமுருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.