பதிவு செய்த நாள்
23
மார்
2019
03:03
கோத்தகிரி : கோத்தகிரி கடைவீதி பண்ணாரியம்மன் கோவிலில், வருடாந்திர விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூ குண்டம் இறங்கினர்.இவ்விழா, 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் அதிகாலை, 9:00 மணிக்கு, அபிஷேக அலங்கார பூஜையும், தொடர்ந்து, 1:00 மணிக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவின் முக்கிய நாளான நேற்று (மார்ச்., 22ல்) காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பூகுண்டம் இறங்கினர். நேர்த்தி கடன் செலுத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், மகளிர் குழுவினர் உட்பட, பொதுமக்கள் செய்திருந்தனர்.