பதிவு செய்த நாள்
23
மார்
2019
03:03
தர்மபுரி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த வள்ளுவர் நகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிர மணியர் கோவிலில், தேர்த்திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) காலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 8:00 மணிக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இரவு, 8:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நாளான நேற்று (மார்ச்., 22ல்) காலை தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தேர் இழுத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.