பதிவு செய்த நாள்
25
மார்
2019
12:03
கிருஷ்ணகிரி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பர்கூர் ஒன்றியம் சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம், கல்யாண முருகர் கோவிலில், 66வது ஆண்டு, பங்குனி உத்திர திருவிழா, கடந்த, 20ல், நடந்தது. சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜையுடன் துவங்கியது. இரவு, 9:00 மணிக்கு, கிருஷ்ணன் பிறப்பு நாடகமும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருத்தேர் ஊர்வலமும், நடந்தது. 22 இரவு, 7:00 மணிக்கு, நடன நாட்டியாலயா நிகழ்ச்சியும், இரவு, 9:00 மணிக்கு, நாடகமும், 10:00 மணிக்கு, பஞ்சுகுட்டியூர் பொதுமக்கள் சார்பில், தாரை தப்பட்டையுடன் தட்டு வரிசை மற்றும் வாண வேடிக்கையுடன் ஊர்வலம் நடந்தது. 23ல், இரவு, 9:00 மணிக்கு, அர்ஜூனன் தபசு நாடகமும், இரவு, 12:00 மணிக்கு வான வேடிக்கையும் நடந்தது. நேற்று (மார்ச்., 24ல்) காலை சுவாமிக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு, அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.