கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.இதையொட்டி சிவக்களம் அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து அலகு குத்தி, பூத்தட்டு எடுத்து நான்கு கி.மீ., தூரத்திலுள்ள காளியம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (மார்ச் 25) முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கிடா வெட்டி பொங்கல் வைக்கப்படுகிறது. நாளை (மார்ச் 26) பூசத்தாய் ஊருணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.