பழநி: பழநி முருகன் மலைக்கோயில் ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (மார்ச் 27ல்) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் இயக்கப்படுகிறது. இது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. உருளைகள், கம்பி வடம், பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இடுவர். பின் ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை செய்து, பின்னர் மார்ச் 28 முதல் வழக்கம்போல இயக்கப்படும் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.