பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
04:04
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!
இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ஏப்.16ல் ராசிக்கு 11ம் இடத்திற்கு வந்து நன்மை தருவார். இதனால் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன்,பொருள் சேரும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். புதன் ஏப்.26 வரை 11ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். அதன் பின் அவரால் முயற்சியில் தடைகள் ஏற்படலாம்.
மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இடத்தில் இருப்பதால் எந்த செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். இருப்பினும் குருவின் 5ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் குதூகலம் நிலவும். உறவினர் வகையில் அனுகூலம் இருக்கும் மே1,2,3ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.15,16 மே 12,13,14ல் அவர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும். ஏப்.22,23ல் பெண்களால் கூடுதல் நன்மை காணலாம். பொன், பொருள் சேரும். மே 6க்கு பிறகு சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். மே12க்கு பிறகு அண்டைவீட்டாருடன் கருத்துவேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம்.
மாத முற்பகுதியில் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். ஏப்.26 க்கு பிறகு விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்க வாய்ப்புண்டு அல்லது பணி விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். எது எப்படியானாலும் ஏப்ரல்29,30ல் சிறப்பான அனுகூலம் உண்டாகும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். மே 6க்கு பிறகு நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசுப்பணியாளர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும்.
வியாபாரிகளுக்கு புதனால் லாபம் இருக்கும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். ஏப்.16க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். ஏப்.26க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண்செலவுகள் உருவாகலாம். செவ்வாயால் எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. மே6க்கு பிறகு பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
மே1,2,3,6,7ல் சிறு தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். ஏப்ரல் 19,20,21ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சலுகை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்த தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன ஏப்.16க்கு பிறகு மறையும். அதன் பிறகு அவர்கள் முன்னேற்றமான பலனைக் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் உழைப்புக்கேற்ற பலனைக் காணலாம்.
மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றி கல்வியில் சிறப்படைவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஏப்.26க்குப் பின் புதன் சாதகமற்ற இடத்திற்கு செல்வதால் கூடுதல் அக்கறையுடன் படிக்க வேண்டியதிருக்கும் .
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பாசிபயறு, பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தைக் காணலாம். கால்நடை வகையில் நல்ல ஆதாயம் பெறலாம். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஏப்.26க்கு பிறகு கணவன், மனைவி இடையே பிரச்னை வந்து மறையும். ஏப்.14, மே10,11ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம்.
* நல்ல நாள்: ஏப்.14,19,20,21,22,23,29,30, மே1,2,3,6,7,10,11
* கவன நாள்: ஏப்.24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,8
* நிறம்: வெள்ளை, பச்சை
* பரிகாரம்:
* சனிக்கிழமையில் நவக்கிரக வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்
* வியாழனன்று குருபகவான் தரிசனம்