பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
01:04
திருப்பூர்:தமிழ் புத்தாண்டு விகாரி நாளை (ஏப்., 14ல்) துவங்குகிறது. இதையொட்டி, காய்கனி மற்றும் பூ ரகங்கள் விற்பனை களை கட்டியுள்ளது.தமிழ் ஆண்டான விளம்பி இன்றுடன் நிறைடைந்து,
நாளை, விகாரி புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டான சித்திரை 1ம் தேதியை, சித்திரை விஷூ கனியாக தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இதையொட்டி வீடுகளில் பூஜை அறைகளில், காய் கனிகள் படைத்து, மலர் மாலைகள் மற்றும் பூக்களால் அலங்கரித்து முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து, தங்க நாணயம் அல்லது நாணயங்கள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.அவ்வகையில் வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய, காய்கனி வகைகள் திருப்பூர் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது.
கிலோ 200 ரூபாய்; ஆரஞ்சு 120; சாத்துக்குடி, வெள்ளரி பழம், மாம்பழம் மற்றும் அன்னாசி பழம் ஆகியன 100; மாதுளை 160; நெல்லிக்காய் 120; திராட்சை 30 முதல் 40 ரூபாய் வாழைப்பழம் 80 ரூபாய் என்ற அளவில் விற்பனையானது.பூ வகைகளின் விலையும் பெரியளவில் ஏற்றமின்றி காணப்பட்டது.
மல்லிகைப் பூ கிலோ 400 ரூபாய்; முல்லை 320; அரளிப்பூ 300; சென்டுமல்லி 80; சம்பங்கி 200 மற்றும் பட்டுப்பூ 80 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டது.