சாயல்குடி வி.வி.ஆர்., நகரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2019 02:04
சாயல்குடி:சாயல்குடி வி.வி.ஆர்., நகரில் உள்ள முத்தாரம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்.,11 ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று (ஏப்., 12ல்) காலை 8:30 மணிக்க முத்தாரம்மன், மாரியம்மன், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தூத்துக்குடி மீனாட்சிசுந்தரம் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.