ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் குலாலர் சமுதாய சூளைவிநாயகர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. இதைமுன்னிட்டு திருவண்ணாமலையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து விநாயகருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் செய்தனர். 3 நாட்கள் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிேஷகம் நடந்தது. ஓய்வு நீதிபதி ராஜன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், மருத்துவத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.