பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
11:04
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயருக்கு சித்திரை முதல் ஞாயிறை முன்னிட்டும், தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டும் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது.
முன்னதாக மா, பலா, வாழை, அன்னாச்சி, ஆரஞ்சு, கொய்யா உள்ளிட்ட பல்வேறு கனி வகைகளை சுவாமி பாதத்தில் சமர்ப்பித்து, வடை மாலையுடன் சித்திரை கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.