விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்புத்தாண்டு தினமான நேற்று லட்சதீப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழுப்புரம் திரு.வி.க.,தெருவில் உள்ள ஆஞ்சநேயசுவாமி கோவிலில் தமிழ்புத்தாண்டு தினமான நேற்று 96 வது லட்சதீப உற்சவம் நடந்தது. கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கியது. அன்று சுவாமி விமானத்தில் வீதியுலா நடந்தது. தெடர்ந்து சந்திரபிரபையில் சுவாமி அருள்பாலித்தார். நேற்று தழிழ் புத்தாண்டையொட்டி காலை சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் லட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். இரவு ஆஞ்சநேய சுவாமி கருடசேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 18 ம் தேதி புஷ்பபல்லக்கில் சுவாமி அருள்பாளிக்கின்றார். வரும் 19 ம் தேதி இரவு ஆஞ்சநேய புஷ்கரணியில் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 20 ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நடைபெறுகிறது.