அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே வலசை கம்மாளப்பட்டி அழகுநாச்சியம்மன், பாரிகருப்புசாமி கோயிலில் சித்திரை களரி திருவிழா நடந்தது.
இதற்காக அழகர்மலை சென்று பாரம்பரிய வழக்கப்படி நூபுரகங்கை தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அழகுநாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்கள், வர்ணகுடைகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் சாமியாடிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக 21 சாமியாடிகள் தங்களின் பரிவார தெய்வங்களின் வேடமணிந்து பாரம்பரிய வழக்கப்படி திரி எடுத்து சாமியாட்டம் ஆடினர்.