ராம ஜன்ம பூமியான அயோத்தியில் இருக்கும் ராமரை ‘ராம்லாலா’ என்கிறார்கள். குழந்தை வடிவிலுள்ள ராமர் திருவுருவம் பளிங்கினால் செய்யப்பட்டு தங்கத்தால் இழைக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில்கள் மற்றும் மடங்கள் மட்டுமே இங்கு நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் இரவும் பகலுமாக இங்கே ‘ராமநாமம்’ இடைவிடாமல் ஜபிக்கப்பட்டு வருவது விசேஷம்!