நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் ‘காக்கும் பெருமாள் சாஸ்தா’ கோயில் உள்ளது. ராம நதிக்கரையில் குடிகொண்டுள்ள இவர் ராமபிரானால் உருவாக்கப்பட்டவர். பெருமாளின் பெயருடன் இந்த சாஸ்தா இருப்பதால், இவரை வழிபடுவோருக்கு ஏராளமான நற்பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை!