திருமுருகப்பெருமானின் பெருமையை மட்டும் எடுத்துக்கூறும் நூல் திருப்புகழ். இதில் அருணகிரிநாதசுவாமிகள் ராமபிரானின் பெருமைகளையும் புகழ்ந்து ஆங்காங்கே பாடியுள்ளார் என்பது சிறப்புக்குரியதாகும். ராமாயணத்தின் பல காட்சி களையும் திருப்புகழில் நம் மனக்கண் முன் தரிசனப்படுத்துகிறார் அருணகிரிநாதர். குறிப்பாக ராமபிரானின் பால பருவம் தொடங்கி, வாலிபப் பருவத்தில் சிவதனுசை முறித்து சீதையைக் கைப்பிடித்தல், தந்தையின் கட்டளைப்படி லட்சுமணன் மற்றும் சீதையுடன் காட்டுக்குச் செல்லுதல், இலங்கைக்குச் சென்று ராவணனை அழித்து சீதையை மீட்டு வருதல் எனப் பல சம்பவங்களை திருப்புகழில் தகுந்த இடங்களில் பாடியிருக்கிறார்.