பெரணமல்லூர் அருகில் உள்ளது இஞ்சிமேடு என்னும் தலம். இங்குள்ள வரதராஜப்பெருமாள் கோயிலில் சீதா - லட்சுமண சமேத ராமபிரான் சேவை சாதிக்கிறார். ராமபிரான் தன் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் தனுசின் (வில்) மேற்புறத்தில் நரசிம்மமூர்த்தி எழுந்தருளியிருப்பது வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய தரிசனமாகும்.