பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
11:04
ஸ்ரீவில்லிபுத்துார், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை (ஏப்.19) வைகையாற்றில் இறங்கும் கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்கல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
நேற்று பகல் 2:40 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளை முத்து பட்டர் செய்தார். வேதபிரான் சுதர்சன் வேதவிண்ணப்பம் செய்தார். ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் ஹயக்ரீவாஸ் தலைமையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு, கிளி மற்றும் மங்கல பொருட்கள் கூடையில் வைத்து மாடவீதியில் சுற்றி காரில் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு எடுத்து செல்லபட்டது. தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன், மணியம் கோபி, ஸ்தானிகம் சத்யாநாராயணன், முரளிகிருஷ்ணா மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.