சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2019 02:04
சாயல்குடி : சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்பிகை கோயில் பழமையும், புரதான சிறப்பும் பெற்றது. நேற்று காலை மூலவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரத்தில் காட்சியளித்த உற்ஸவர் கைலாசநாதருக்கும், மீனாட்சியம்பிகைக்கும் காலை 9:50 மணிக்கு் மாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடந்தது. கோயில் சார்பில் பிரசாத தாம்பூலம் வழங்கப்பட்டது. பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டனர்.
பக்தர்களின் மீது அட்சதை துாவப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.அன்னதானம் நடந்தது. பக்தர்கள் மொய் எழுதினர்.ஏற்பாடுகளை ரவிச்சந்திர குருக்கள் மற்றும் மாதாந்திர பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர். * கீழக்கரை மேலத்தெருவில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ரஜெப பாராயணத்துடன் பூஜை துவங்கியது. காலை 10:00 மணிக்கு உற்ஸவர்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது.பெண்களுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. மாலையில் உற்ஸவ மூர்த்திகளின் உள்பிரகார வீதியுலா நடந்தது.