திருவாடானை: திருவெற்றியூர் கோயில் தேரோட்டம் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,10ல் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. வல்மீகநாதர், பாகம்பிரியாள் தாயாருடன் அமர்ந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலை 10:30 மணிக்கு கோயில் முன்பு தேர் நிறுத்தப்பட்டு, மீண்டும் மாலை 4:00 மணிக்கு துவங்கி 5:00 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் பரமேஸ்வரபாண்டியன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.