திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2019 01:04
நடுவீரப்பட்டு: திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நடைபெற உள்ள தீமிதி திருவிழாவை முன்னிட்டு 17ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றம் நடந்தது. அன்று மாலை 4:00 மணிக்கு விநாயகர்,திரவுபதியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.