பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
11:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், தேர்த்திருவிழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 43வது ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த, 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.
கடந்த, 11ம் தேதி காலை, கொடி ஏற்றுதல் நடந்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜப்பெருமாள், ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம் மற்றும் வாகனங்களில், வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றன.கடந்த, 17ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை தேர்த்திருவிழாவையொட்டி, அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாளை தேரில் எழுந்தருளல் மற்றும் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.மாலையில், தேரோட்டம் துவங்கியது. கடைவீதி, வெங்கட்ரமணன் வீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது.இன்று காலை, 6:00 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை, 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை, 21ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.