பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
01:04
சென்னை : சைதாப்பேட்டை காரணீஸ்வர் கோவிலில், சித்திரைப் பெருவிழாவின் இறுதி நாளான நேற்று, திருக்கல்யாண வைபவம், விமரிசையாக நடந்தது. சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில், சித்திரைப் பெருவிழா, 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் பிரதான நாளான ஏப்., 16ம் தேதி, தேர் திருவிழா நடந்தது.விழாவின் கடைசி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு, நடராஜர் தரிசனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும், இந்திர குளத்தில், தீர்த்தவாரி உற்சவமும் நடந்தன. நேற்று இரவு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதை முன்னிட்டு, உற்சவர் சோமாஸ்கந்தர், அம்பாள் ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.பின், திருமண வைபத்தில், மாங்கல்ய தாரணம் நடந்தது. மணக்கோலத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.