மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட், லோயர் டிவிஷனில் கன்னியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நள்ளிரவில் பெண்கள் உள்படநுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தும், நேற்று தீச்சட்டி, பால் குடம், முளைப்பாரிஆகியவை எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழாடையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், பூஜை உள்பட அபிஷேகங்களும் நடந்தன. அன்னதானமும் வழங்கப்பட்டது. மூணாறு ஊராட்சி தலைவர் கருப்பசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.