Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி பரமசிவன் கோயில் சித்திரை ... கல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு கல்லுமலை கந்தன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
11:04

மதுரை : மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிவித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வளைதடி, நேரிகம்பு, வாள், சங்குசக்கரம் உள்ளிட்ட பஞ்சாயுதங்களுடன் தங்கப்பல்லக்கில் அழகர் மலைக்கு திரும்பினார்.

மதுரை வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர், பூப்பல்லக்கில் நேற்று அழகர்கோவிலுக்கு புறப்பட்டார். மழை பெய்து நீர்வளம், விவசாயம் செழிக்க வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க, அழகர்கோவிலில் இருந்து கள்ளர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் ஏப்.,17 மதுரை புறப்பட்டார்.

ஏப்.,18 மூன்று மாவடியில் எதிர்சேவை, ஏப்.,19 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். ஏப்.,20 தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபம் அளித்தார். ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடந்தது. நேற்று அதிகாலை 3:45 மணிக்கு தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயில் அருகே ராமநாதபுரம் சேதுபதி மண்டகபடியில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார். மூன்று மாவடியில் இருந்து இரவு 7:00 மணிக்கு அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். இன்று (ஏப்.,23) அப்பன்திருப்பதி, கள்ளந்திரியில் எழுந்தருளிய பின் காலை கள்ளழகர் கோயில் சென்றடைந்தார். அழகரை ஏராளமான பக்தர்கள் பூக்களை தூவி கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வரவேற்றனர். சுவாமிக்கு பூசணிக்காய்கள் வைத்து தீபமேற்றி திருஷ்டி கழித்தனர். மேளதாளம் முழங்க, பக்தர்களின் கரகோஷங்களுடன் கள்ளழகர் இருப்பிடம் சேர்ந்தார். நாளை (ஏப்.,24) உற்சவ சாந்தி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வி.ஆர். வெங்கடாஜலம், செயல் அலுவலர் செ.மாரிமுத்து செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar