மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 15 ந் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களின் போது தினந்தோறும் வீர அழகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா கடந்த 19 ந் தேதி காலை நடைபெற்றது,இதில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோர்ட்டார்கள் மண்டகப்படியில் இரவு தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீர அழகருக்கு வாமணர்,ராமர்,கிருஷ்ணர் உள்ளிட்ட பல அலங்காரம் செய்யப்பட்டு அபிேஷக ஆராதனை நடத்தப்பட்டன. விழாவில் ஏராளமனோர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நேற்று காலை சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா சென்று கோயிலை அடைந்தார்.