நண்பர்களோ, உறவினர்களோ...யாராக இருந்தாலும், அவர்களது வீட்டுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி சென்றாலும் நீண்ட நேரம் பேசினால் அவர்களுக்கு நம் மீது சலிப்பு ஏற்படும்.
ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்ற தம்பதி, நீண்ட நேரம் பேசினர். தாங்கள் அந்த ஊருக்கே மாற்றலாகி வந்து விட்டதாகவும், வாடகை வீடு பார்க்க அலைந்த கதை, குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பட்டபாடு, குடிநீருக்கு தெருத்தெருவாக குடங்களுடன் அலைந்தது என கதையளந்தனர்.
சற்று நேரம் வரை சுவாரஸ்யமாகக் கேட்ட நண்பர் தொடர்ந்து கேட்க முடியாமல் மனம் சலித்தார்.
ஒரு கட்டத்தில் முகத்தைச் சுளித்தார்.
“சரி...எனக்கு தூக்கம் வருகிறது. நீங்கள் கிளம்புகிறீர்களா?” என்றார் நண்பர். என்னவோ போலாகி விட்டது தம்பதிக்கு. மற்றவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வதோ, அதிக நேரம் பேசுவதோ கூடாது.
“உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு அடிக்கடி அவன் வீட்டில் காலை வைக்காதே” என்ற வசனத்தை சற்று சிந்தியுங்கள்.