வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2019 01:04
பண்ருட்டி : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் சுவாமிகளின் சதய உற்சவம் கடந்த 20ம் துவங்கி நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு 3ம் நாள் நிகழ்ச்சியாக, கடந்த ஏழாம் நுாற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட சமண சமய மன்னர், திருநாவுக்கரசர் எனும் அப்பர் சுவாமிகளை கருங்கல்லில் கட்டி கடலில் வீச உத்தரவிட்டார்.அப்போது நமச்சிவாய பதிகம் பாடி அந்த கல்லையே தெப்பமாக்கி திருநாவுக்கரசர் கரையேறினார். இந்த ஐதீக நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணிக்கு கோவிலில் நடந்தது.தெப்பத்தில் உற்சவர் திருநாவுக்கரசர் சுவாமிகள் வலம் வந்து, கரையேறிய பின் பதினாறு கால் மண்டபத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது. அர்த்தஜாம பூஜையில் திருநாவுக்கரசர் அம்பாளை வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.