பதிவு செய்த நாள்
26
ஏப்
2019
11:04
பண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் உற்சவத்தில், உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பண்ருட்டி ராஜாஜி சாலை, திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 16 ம் தேதி பாஞ்சாலன் அர்ச்சுனரால் கட்டுண்ட உற்சவம், 17ம் தேதி அரக்கு மாளிகை உற்சவம், 18 ம் தேதி பக்காசூரன் உற்சவம், 19ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடந்த 2 ம் தேதி பாண்டவர் வனம் புகுதல், 21ம் தேதி அர்ச்சுனன் தபசு உற்சவம், 22ம் தேதி மாடுபிடி சண்டை உற்சவம், 23ம் தேதி அரவாண் களபலி உற்சவம், வெள்ளையானை புறப்பாடும், 24 ம் தேதி கர்ணமோட்ச உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, காலை 11:00 மணிக்கு மூலவர் விநாயகர், மூலவர் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து. பகல் 12:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் கருட வாகனத்திலும், உற்சவர் அர்ச்சுனன் வில்லேந்தி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று 25 ம்தேதி மாலை 5:30 மணியளவில் களத்துமேடு பகுதியில் சக்கரவர்த்திகோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.