மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் புட்டுதோப்பு என்ற இடத்தில் பிட்டு சொக்கநாதர்; திருக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 63வது திருவிளையாடல் நடந்த தலம் இது என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும், ஆவணி மற்றும் ஐப்பசி மாதங்களில், சிவனார் பிட்டுக்காக மண் சுமந்து, பாண்டிய மன்னனிடம் பிரம்படிபட்டு நிகழ்த்திய திருவிளையாடல் வைபவம் இங்கே கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அருளும் சொக்கநாதர் இந்தத் தலத்துக்கு வந்து அருள்பாலிப்பார். அன்று, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிட்டு பிரசாதம் சகல நோய்களையும் நீக்கும் வல்லமை கொண்டது என்பது நம்பிக்கை.