மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அபார வளர்ச்சி
பதிவு செய்த நாள்
14
மே 2019 11:05
பெரும்பாலான கிரகங்கள் சாதகமான இடத்தில் இருப்பதால் அதிக முன்னேற்றங்களை காண்பீர்கள். அபார வளர்ச்சியும், முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். தனுசு ராசியில் இருக்கும் குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிக உயர்வான நிலை. அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும்.
ராகு, செவ்வாயால் அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். சுக்கிரனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். ஜூன்3க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
குடும்பத்தில் பண வரவுக்கோ, மகிழ்ச்சிக்கோ குறை இருக்காது. புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். மே26க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். மே24,25ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். மே19,20, ஜூன்15ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மே31, ஜூன்1ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைப்பளு குறையும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் மே 28 வரை அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும். அதன் பிறகு பதவி உயர்வு கிடைக்கும். வேலை விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர். மே16,17,18, ஜூன்13,14ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். மே28 வரை அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். யாரையும் நம்பி பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ ஒப்படைத்து விட வேண்டாம். மே 21,22,23,26,27,28ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன்5,6ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ஜூன்3 க்கு பிறகு கோயில், புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
கலைஞர்கள் வாழ்வில் சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சககலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். ஜூன்2,3,4ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு குருவால் கல்வி சிறப்பாக அமையும். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். மே28க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், கோதுமை, சோளம், மஞ்சள், காய்கறி மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். மே28க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. பக்கத்து நிலத்துக்காரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.
பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். மே28க்கு பிறகு சுபவிஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும். மே29,30ல் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம். ஜூன் 7,8ல் சிலருக்கு விருந்து, விழா என செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். ஜூன்3க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். விரிவாக்கம் செய்ய வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* நல்ல நாள்: மே 16,17,18,19,20,24,25,29,30, ஜூன் 5,6,7,8,13,14,15 * கவன நாள்: ஜூன் 9,10 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 3,7 * நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: ● புதன்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு ● சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை ● வெள்ளியன்று மகாலட்சுமிக்கு அர்ச்சனை
|