கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) குழந்தை பாக்கியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2019 11:05
மே 29 வரை புதன் அனுகூலமான பலன்களை தருவார். சுக்கிரன் ஜூன்4ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். சனி, கேது மாதம் முழுவதும் நன்மையளிப்பர். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் சுபபலன் கொடுப்பார்.
தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. குரு பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். இருப்பினும் இந்த காலத்தில் அவரின் 5-ம் இடத்துப்பார்வை மூலம் கெடுபலன் குறைந்து நன்மை சேரும்.
குடும்பத்தில் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆற்றல் மேம்படும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். சுக்கிரனால் தம்பதியிடையே அன்பு, பாசம் மேலோங்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புதன் 4-ம் இடத்தில் இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.
மே26,27,28ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். பணஉதவி கிடைக்கும். மே21,22,23ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன்2,3,4ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
ஜூன் 3க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.
பணியாளர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சூரியனால் பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மே21க்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். மே19,20, ஜூன்15ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வியாபாரம் வளர்ச்சி முகமாக இருக்கும். பழைய கடன்கள் அடைபடும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். மே28க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். மே24,25,29,30ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன்7,8ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்கள் சுக்கிரன் பலமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டு வந்து சேரும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.
மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மாணவர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறுவர். ஆனாலும் மே28க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் காண்பர். மஞ்சள், எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.
பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மே28க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் பொறுமையும், நிதானமும் தேவை. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும். ஜூன்3க்கு பிறகு உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். நல்ல பணப்புழக்கத்தை காண்பீர்கள். மே31, ஜூன்1ல் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.
* நல்ல நாள்: மே 19,20,21,22,23,26,27,28,31, ஜூன் 1,7,8,9,10,15 * கவன நாள்: மே 15, ஜூன் 11,12 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 6,7 * நிறம்: சிவப்பு, கருப்பு
பரிகாரம்: ● செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை ● தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம் ● சுவாதியன்று லட்சுமிநரசிம்மர் வழிபாடு
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »