பொருள்: சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட நல்ல செயல்களை, ’நான் செய்கிறேன்’ என்ற எண்ணம் இல்லாமல், அதனால் கிடைக்கும் பயன்களில் விருப்பம் கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வது ’சாத்வீகம்’ எனப்படும். கடுமையான உழைப்பால் நிறைவேறக் கூடியதாகவும், அதனால் கிடைக்கும் பயன்களில் விருப்பம் கொண்டும், ’நான் செய்கிறேன்’ என்ற அகந்தையுடனும் செய்யப்பட்டால் அச்செயல் ’ராஜஸம்’ எனப்படும்.