பெண்ணினத்துக்கு எதிராக கொடுமைகள் நடந்து வரும் இன்றைய சூழ்நிலையில், அவர்களை எப்படி நடத்த வேண்டும் என நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள். ஒரு பெண் மானக்கேடான விஷயத்தில் பகிரங்கமாக ஈடுபட்டாலும் கூட, ஏற்கனவே அவளிடம் நடந்ததை விட இன்னும் கண்ணியமாக இருங்கள். அவளுக்கு ஏதேனும் பொருள் கொடுத்திருந்தால் அதைத் திரும்பப் பெற முயற்சிக்க வேண்டாம். எந்தப் பெண்ணாவது கணவனுக்கு எதிராக நடப்பதாக தெரிந்தால், அவளுக்கு நல்லதை எடுத்துச் சொல்லி திருத்துங்கள். அவள் திருந்தி விட்டால், அவளைத் தண்டிக்காதீர்கள். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாட்டால் பிரிந்தால், இருவரது வீட்டில் இருந்தும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை அழைத்து சமாதானத்திற்கு முயற்சி செய்யுங்கள். பெண்களும், ஆண்களும் அனுசரித்து நடந்தால் குடும்பத்தில் பிரச்னை உண்டாகாது. நல்லொழுக்கமுள்ள பெண்கள் எப்போதும் பணிவாக இருப்பார்கள். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், கடவுளின் காவலைக் கொண்டு தங்களை காத்துக் கொள்வார்கள்.