தேவையானவை: எலுமிச்சை - – 2 வெல்லம் - – 250 கிராம் சுக்குப்பொடி – - சிறிதளவு ஏலக்காய் –- 2
செய்முறை: எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். வெல்லத்தை நன்கு பொடியாக்கி எலுமிச்சை சாறுடன் கலக்கவும். பிறகு சுக்குப்பொடி, ஏலக்காய் சேர்க்க நரசிம்மருக்கு விருப்பமான பானகம் ரெடியாகி விடும்.