● மனதில் அன்பை நிரப்புங்கள்; உலகம் உங்களுக்கு சொந்தமாகி விடும். ● பூமியில் பிறந்தால் மட்டும் போதாது; இளமையிலேயே சாதனை படைக்க வேண்டும். ● ஆத்திரம் கண்களை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடுங்கள். ● தியானத்தில் வெற்றி பெறும் போது வாழ்வில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ● பக்தி ஒன்றைத் தவிர வேறு எதையும் கடவுள் எதிர்பார்ப்பதில்லை. ● தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுபவர்கள், துன்பத்திலிருந்து விடுபடுவர். ● எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும் விதத்தில் மனதை மாற்ற பழகுங்கள். ● பிறரிடம் குற்றத்தையே பார்ப்பவன் நாளடைவில் குற்றவாளியாகும் வாய்ப்பு அதிகம். ● உலக வாழ்வில் பற்று குறைந்தால் மனதில் நிம்மதி கிடைக்கும். ● மனதில் தூய்மை இருந்தால் காணும் காட்சி எல்லாம் பரிசுத்தமானதாகும். - சொல்கிறார் சாரதாதேவியார்