பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
அன்னூர்: நல்ல கவுண்டன்பாளையத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. எஸ்.எஸ்.குளத்தில், கவையன்புத்தூர் தமிழ் சங்கம் சார்பில், ஒவ்வொரு மாதமும், இலக்கிய நிகழ்வு நடக்கிறது. இம்மாத நிகழ்வு, நல்ல கவுண்டன்பாளையம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் நடந்தது. உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்றார்.
பட்சிராஜன், அலாவுதீன் முன்னிலை வகித்தனர்.பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் பேசுகையில், தமிழ் இலக்கியத்தில் முதன்மையானது திருக்குறள். திருக்குறளை கற்று பின்பற்றி, வாழ்ந்தால் வாழ்வில் எந்த பிரச்னையும் வராது, என்றார். தமிழறிஞர் தர்மலிங்கம் பேசுகையில், உலகில் முதல் மொழி லத்தீன் மொழி. ஆனால் சிறந்த மொழி தமிழ்தான் என பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர், என்றார்.அன்வர் பாட்ஷா பேசுகையில்,திருக்குறளை அனைவரும் வாசிக்க வேண்டும், என்றார். முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ் வாழ்த்தி பேசினார். நாயக்கன்பாளையம், பொன்னு ரங்கசாமி வழங்கிய திருவள்ளுவர் சிலையை, கண்ணம்மாள் திறந்து வைத்தார்.
திருக்குறள் நாராயணசாமி, கல்வெட்டை திறந்து வைத்தார். பிரபஞ்ச திருக்குறள் ஆய்வு அற வாரியத்தின் மூன்றாவது கிளை திறந்து வைக்கப்பட்டது.சிரித்தால் சிரஞ்சீவி ஆகலாம் என்னும் தலைப்பில், கோபாலானந்தா பேசினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சதாசிவத்துக்கு, குருஜி சிவாத்மா விருது வழங்கினார். புலவர் செல்வராஜ், திருக்குறளையும், பைபிளையும் ஒப்பிட்டு பேசினார். தமிழ்ப்பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.