பதிவு செய்த நாள்
16
மே
2019
03:05
காஞ்சிபுரம்: குமரகோட்டம், வைகாசி விசாகப்பெருவிழாவின், ஏழாம் நாளான நேற்று (மே., 15ல்), வள்ளி தெய்வானையுடன், சுப்ரமணியர் தேரில் எழுந்தருளி, உலா வந்தார்.
காஞ்சிபுரம், குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், 9ம் தேதி, வைகாசி விசாகப் பெரு விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலையில், சுவாமி, பல வாகனங்க ளில் எழுந்தருளி உலா வந்தார்.ஏழாம் நாள் உற்சவமான நேற்று (மே., 15ல்) காலை, வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில், சுப்ரமணியர் எழுந்தருளிபக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிறப்பு பூஜைகளுக்கு பின், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க,தேர் புறப்பட்டு, நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.வழிநெடுகிலும், பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, சுவாமியை வழிபட்டனர்.