பதிவு செய்த நாள்
18
மே
2019
11:05
பழநி, வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது.
வசந்த உற்சவ விழா என அழைக்கப்படும், வைகாசி விசாக விழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மே 12 முதல் 21 வரை நடக்கிறது. விழாவில் ஆறாம் நாளான நேற்றிரவு திருக்கல்யாணத்தை முன்னிட்டு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்து, யாக பூஜையுடன், சிறப்பு அலங்காரத்தில் இரவு 7:20 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.இணை ஆணையர் செல்வராஜ், டி.எஸ்.பி., விவேகானந்தன், கண்காணிப்பாளர் முருகேசன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் ரதவீதியில் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.