அவிநாசி, திருமுருகன் பூண்டியில் ஒரே கல்லில் 15 அடி உயர பக்த ஆஞ்சேயர் சிலை செதுக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சித்தாத்துார் கிராமத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்த ஆஞ்நேயர் சிலையை பிரதிஷ்டை செய்ய பக்தர்கள் திட்டமிட்டனர்.சிலை செதுக்கும் பணி திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள முருகன் சிற்பக் கலைக்கூடத்தில் ஒப்படைக்கப்பட்டது. 10 சிற்ப கலைஞர்கள் ஆறு மாதங்களாக சிலை செதுக்கும் பணியை செய்தனர். நேற்று அச்சிலை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.சிற்பி யுவராஜ் கூறுகையில் 14 டன் எடையுள்ள ஒரே கல்லை செதுக்கி சிலையாக வடித்தோம். சிலையின் எடை 9 டன். உயரம் 15 அடி. சிலை சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.திருப்பணி குழுவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில் எங்கள் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. அடுத்த மாதம் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இங்கு பக்த ஆஞ்சநேயர் சிலை வைக்க ஊர் மக்கள் விரும்பினர். திருமுருகன் பூண்டியில் சிறப்பான முறையில் சிலை செய்வதை அறிந்து இங்கு சிலை தயாரித்து எடுத்து செல்கிறோம் என்றார்.