தேவகோட்டை: எழுவங்கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத விசுவநாதர் கோவிலில் விசாக விழா கடந்த 9 ந்தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஐந்தாம் நாள் விசுவநாதர் அகிலாண்டேஸ்வரி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று 9 ம் நாள் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அதிகாலை சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 4:40 மணிக்கு சுவாமி , அம்மன் தேரோட்டம் நடந்தது. தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்களுக்கு மாங்கனிகள் வீசப்பட்டது.