Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமணத்தடை நீக்கும் கமண்டல ... ஏர்வாடியில் வைகாசி வசந்த உற்ஸவ விழா ஏர்வாடியில் வைகாசி வசந்த உற்ஸவ விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊர் செழிக்க கிராமத்தில் நடக்கும் குதிரை எடுப்பு
எழுத்தின் அளவு:
ஊர் செழிக்க கிராமத்தில் நடக்கும் குதிரை எடுப்பு

பதிவு செய்த நாள்

18 மே
2019
01:05

மானாமதுரை: தமிழகத்தில் தற்போதுள்ள நாகரீக மோகத்தில் தமிழர்களின் பண்டைய கலாசாரம், திருவிழாக்கள் மெல்ல, மெல்ல அழிந்து வருகின்றன.

கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்தலும் கூடிக்கொண்டே வருகின்றது. இதனால் கிராமங்களில் நடக்கும் பாரம்பரிய திருவிழாக்கள் மற்றும் அறிவியலோடு தொடர்புடைய வழிபாடுகள் மற்றும் பல கலாசார நிகழ்வு குறைந்து கொண்டே
வருகின்றன.

இதனை மீட்டெடுக்கும் வகையில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினர் பண்டைய கலாசாரத்தை விளக்கும் விழாக்கள் குறித்து நகர் மக்களிடம் எடுத்து கூறி காக்க வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மழை வேண்டியும், ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டியும் கிராமங்களில் ஜாதி, மதம் பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து மண்ணால் ஆன குதிரை, காளைகள், சாமி
உருவங்கள் செய்து அதனை ஊர்வலமாக கொண்டு வந்து ஊரில் இருக்கும் காவல் தெய்வ கோயிலில் வைத்து வழிபடுவதால் வருடந்தோறும் தவறாமல் மழை பெய்து பூமி செழித்து நன்றாக விவசாயம் நடைபெற்றதாக முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நாகரீக காலத்தில் தற்போது பெரும்பாலான கிராமங்களில் இதனை யாரும் பின்பற்றுவது கிடையாது.மானாமதுரை பகுதியில் உள்ள ஒரு சில கிராமங்களில் இன்றளவும்
வருடந்தோறும் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வாரி விதித்து மொத்தமாக சேர்ந்து செலவு செய்து குதிரை எடுப்பு திருவிழாவை நடத்தி வருகின்றனர். அன்றைக்கு அவரது உறவினர்கள் அனைவரையும் தங்களது கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து அளித்து வருகின்றனர்.

இதனால் ஊரில் ஒற்றுமை நிலவுவதாகவும், கிராமம் செழிப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar