கொடைக்கானல்: கொடைக்கானல் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 20 நாள் விசேஷ, ஆராதனைகளும் காப்புகட்டுதல் நடந்தது. நேற்று (மே., 17ல்) திருக்கல்யாண வைபவத்தில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நிறைவடைந்து சங்கரலிங்கேஸ்வரர் மற்றும் கோமதியம்மாள் திருப்பூட்டு வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.