கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவிலில், ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தல வாடியில் உள்ள, யோக நரசிம்மர் சுவாமி கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி விழா நேற்று (மே., 17ல்)கொண்டாடப்பட்டது. காலை, 10:00 மணி முதல், சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. பின் அனுமன் மற்றும் நரசிம்மர் சுவாமிக்கு, மதிய பூஜை நடந்தது. அதில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, உள்பட ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.