பதிவு செய்த நாள்
18
மே
2019
03:05
ஈரோடு: ஈரோடு, பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள், அம்மனுக்கு பரிவட்டம் கட்ட, சேலைகள், பாவாடைகளை காணிக்கை அளித்தனர்.
பண்டிகையில் பயன்படுத்தியதுபோக, உபரி பரிவட்ட சேலைகள், பாவாடை ஏலம் பெரியமாரியம்மன் கோவிலில், நேற்று 17 ல், நடந்தது. இதில், 169 பரிவட்ட சேலைகளில், 31 ஏலம் போனது. 121 பாவாடையில், இரண்டு ஏலம் எடுக்கப்பட்டது. சேலை, 150 ரூபாய் முதல், 200 ரூபாய், பாவாடை, 100 ரூபாய் முதல், 110 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. மீதி பரிவட்ட சேலைகளை வரும், 31ல் மறு ஏலம் விடப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.