பதிவு செய்த நாள்
18
மே
2019
03:05
ஈரோடு: நரசிம்மர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில், இரணியகசிபுவை வதம்
செய்வதற்காக, நான்காவது அவதாரமாக, நரசிம்ம அவதாரம் எடுத்ததார். திரோதாயுகம், வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், நரசிம்மர் அவதரித்தார். இந்நாளான நேற்று
(மே., 17ல்), விஷ்ணு ஆலயங்களில், நரசிம்மர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதன்படி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள், பானகம் படைத்து நரசிம்மரை வழிப்பட்டனர். ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதி பக்தர்கள்
தரிசனம் செய்தனர்.