பதிவு செய்த நாள்
18
மே
2019
03:05
நல்லம்பள்ளி: தர்மபுரி அடுத்த பாளையம்புதூரில், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தர்மபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அடுத்த பாளையம்புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் (மே., 16ல்) கொடியோற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, நேற்று (மே., 17ல்) காலை, தீச்சட்டி எடுத்து ஊர்வலம் வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்துதல், தேர் இழுத்தனர். மாவிளக்கு எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில், பாளையம்புதூரை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.