பதிவு செய்த நாள்
18
மே
2019
03:05
ப.வேலூர்: கோலாரம் கரிய பெருமாள் கோவிலில், வரும், 30ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
ப.வேலூர் அடுத்த கோலாரம் கிராமம், வாவிபாளையத்தில், விநாயகர், மாதேஸ்வரர், கரிய காளியம்மன், மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிய பெருமாள் கோவில் உள்ளது.
கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப் பட்டது. பணிகள் முடிந்துள்ள நிலையில், வரும், 30ல் கும்பாபி ஷேகம் செய்யப்படவுள்ளது.
வரும், 28 இரவு, 10:00 மணிக்கு, கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. மறுநாள் காலை, 7:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், 9:05 மணிக்கு தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வருதல். மாலை, 5:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், இரவு, 7:00 மணிக்கு, யாகசாலை பிரவேசம், முதற்கால வேள்வி துவக்கம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு, 10:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி. வரும், 30 அதிகாலை, 5:45 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி, காலை, 8:45 மணிக்கு, சங்கல்பம், கடம் புறப்பாடு, 9:05 மணிக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம், கோ பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.