உளுந்தூர்பேட்டை மாஷபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2019 03:05
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டார் கோவில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.
இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை காலையில் பஞ்சமூர்த்திகள் சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடந்தது. 15ம் தேதி மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று (மே., 17ல்) காலை 8:50 மணிக்கு துவங்கியது.
அதனையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இன்று 18ம் தேதி காலை 9:00 மணியளவில் ஞான தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு சண்டிகேஸ்வரர் சுவாமி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.